திங்கள், 5 ஜனவரி, 2009

புஷ் பதில் சொல்லவேண்டிய கேள்விகள்





"
காஸா மீதான தாக்குதலுக்கு காரணம் ஹமாஸ் அமைப்பே "

இப்படி உளறியவர் சாட்சாத் புஷ் தான் , ஏன் இந்த கொலைவெறி ? தங்களுக்கு உயிரைக்காக்க கூட சுதந்திரம் இல்லாத நாட்டில் மக்கள் வாழ்ந்து வருவதே பெரிய விஷயம். இந்த லட்சணத்தில் அமெரிக்க அதிபர் "செருப்படிபட்ட வீரர் " புஷ் தனது செல்ல நாய்க்கு ரொட்டி துண்டுகளாக இந்த உரையை வீசியுள்ளார். அப்பாவி காசா மக்கள் என்ன தீங்கு செய்தார்கள் அங்கு பிறந்ததை தவிர?

சரி அதெல்லாம் இருக்கட்டும் அமெரிக்காவை யார் எதிர்த்தாலும் தீவிரவாதியா? என் இந்த பொதுவுடமை தோழர்கள் எதிர்க்கிறார்கள் அவர்களை அரசியல் சதுரங்கத்தில் வெல்ல இயலாமல் . தன் நாட்டு மக்கள் உணவின்றி பொருளாதார வீழ்ச்சியினால் வீடு இல்லாமல் இருப்போர் பெருகி வருகிறார்கள். இந்த லட்சணத்தில் ஒரு இனத்தையே பூமியில் இருந்து அழிக்க நினைக்கிறார்கள். கேட்டால் தீவிரவாதத்தை அழிக்கிறார்களாம்? யாரிடம் சொல்ல இவர்களின் இந்த இழி நடத்தையை.

ஏன்டா உணவு தானியங்கள் விலை தாறுமாறாக உயர்ந்தது என்று காரணம் கேட்டால் , "இந்தியாவில் நடுத்தர வர்க்கம் சாப்பாட்டு ராமர்களாய் மாறி விட்டார்கள்" என்று கூசமால் புளுகிய அமெரிக்க ஆளும் வர்க்கம், போபால் பயங்கர வாதத்துக்கு என்ன பதில் ? எதோ உன் நாட்டு பிரஜை சில பேர் மும்பை குண்டுவெடிப்பில் இறந்தார்கள் என்பதற்க்காக இந்திய வந்து விசாரித்து போகிறாய். ஆயிரக்கணக்கில் இறந்து லட்சக்கணக்கில் இன்னமும் மரணத்துடன் போராடுகின்ற எம் போபால் மக்களை பார். எதோ உனக்குத்தான் உயிரோடு இருக்க அதிகாரம் இருப்பதையும் மற்றவனெல்லாம் சாகத்தான் வேண்டும் எனவும் நீ செய்துவரும் காரியங்களுக்கு என்ன பெயர் வைத்து இருக்கிறாய்? . உன் எண்ணெய் ஆசைகளுக்கு யார் எதிரில் முட்டுக்கட்டை போட்டார்களோ அவரெல்லாம் உனக்கு எதிரி. இரட்டை கோபுரம் சாய்ந்த பின்தான் உன் கூற்றை எல்லாம் உலகமெல்லாம் கேட்டதே. உனக்கு ஆபத்து என்றால் உலகத்துக்கே ஆபத்து. அதைபோல உனக்கு லாபம் வந்தால் உலகத்துக்கு கொடுத்துவிட வேண்டியது தானே.

உன் ஆயுதம் விற்க வேண்டுமென, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிண்டு முடித்து விட்டு ரத்தம் பார்க்க ஆசைப்படுகிறாய். என் இந்த கொலை வெறி?

ஆப்கனிஸ்தானில், ஈராக்கில் இறங்கிய உன் இராணுவம் , யாரை பார்த்தாலும் சந்தேகம் கொள்கிறது. நிறைமாத கர்ப்பிணி என்று கூட இல்லை, வயிற்றில் குண்டுவைத்து இருக்கலாம் என்ற காரணத்தினால் அவர்களுக்கு ஒரு துப்பாக்கி குண்டை பரிசாக கொடுப்பீர்கள். உடலில் ரத்தாறு ஓடுவதை ரசிப்பீர்கள் .

உங்கள் உடல் பசிக்கு அபலை பெண்கள். உங்கள் பொழுது போக்கிற்கு போர்கைதிகள், அவர்களின் உடம்பை சித்ரவதை செய்வீர்கள். எப்படி முடிகிறது உங்களால்? என்ன செய்தாலும் தீவிரவாத ஒழிப்பு என்ற ஒற்றை சொல்லில் நிறுத்தி விடுவீர்கள். மனிதத்தன்மையற்ற செயல்களை செய்து விட்டு மனித உரிமை பற்றி பேசுகிறீர்கள் . காசாவில் கொல்லப்பட்ட மக்கள் தீவிரவாதிகளா? தீவிரவாதிகளை அழிக்கிறீர்களா? அல்லது இனத்தையே அழிக்கிறீர்களா?

உங்களிடம் இல்லாத ஆயுதமா ? ஈராக் என்ற தேசத்தில் பல அழிவுக்கருவிகள் உள்ளன என தங்களின் அண்டபுளுகை என்ன சொல்ல? தனக்கு உலகமே அடிமையாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைப்பதை தடுக்கும் சக்திகள் உங்களுக்கு தீவிரவாத மாகத்தான் இருக்கும். ஏகாதிபத்ய அமெரிக்காவே நீ செய்த அக்ரமங்களுக்கு விரைவில் சம்பளம் பெறுவாய்.

"அனைத்துக்கும் மேலாய் முதாளித்துவம் தனக்கு சவக்குழி தோண்டுபவரையே உற்பத்தி செய்கிறது " பேராசானின் தத்துவம் உனக்கு பொருந்தக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது.

வெள்ளி, 2 ஜனவரி, 2009

டஸ் என்று ஒருவன்



டஸ்
பற்றி பதிவு போட வேண்டிய அவசியம் வந்து விட்டதை உணருகின்றேன். நீங்கள்
டஸ் என்றால் என்ன என்று இப்படி அவனை அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
டஸ் சராசரி மாணவன் ( அதாவது முப்பாது ஐந்து முதல் நாற்பது வரை) மதிப்பெண்களில் உலா வருபவன். நான் சொல்வதை சற்று கற்பனை செய்து பார்த்து விட்டால் அவனை நீங்கள் கண்டு விடலாம். நல்ல சிகப்பு நிறம் தட்ட குச்சியை விட சற்று பருமனான தேகம். பந்தா பண்ணுவது என்றால் என்னவென்ற தெரியாத அப்பாவி பிள்ளை (உண்மையிலே அவனுக்கு பந்தா பண்ணுவது என்றால் என்ன வென்றே தெரியாது )

நாங்கள் சப்பை பிகரு முன்னால கூட அலம்பல் பண்ணிதிரியும் போது மேலும்

சனி, 27 டிசம்பர், 2008

தீவிரவாதத்திற்கு முன்பு



எதோ
சட்டம் கடுமையாக்கப்பட்டால் தீவிரவாதத்தை ஒழித்து விடலாம் என கனவு கோட்டை கட்டிக்கொண்டு இருந்ததால் கண்டிப்பாக அது நகைப்புக்கு உரியதே அன்றி வேறில்லை. உருவாகிறதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தந்து விட்டு ஐயோ அம்மா என்றால் என்ன செய்வது?

தீவிரவாதி எனப் படுபவன் என்றும் தன் உயிருக்கு பயந்து இந்த காரியத்தில் இறங்க மாட்டான் ஆனால் அரசின் வாதம் என்னவென்றால் இந்த நடவடிக்கை சட்டத்தின் மூலம் குணப்படுத்தலாம் என உரைப்பது கண்டிப்பாக கண்துடைப்பே அன்றி வேறில்லை. அனைவர்க்கும் வேலை, வறுமையற்ற வாழ்வு, நோய் தீர்க்க மருத்துவமனைகள் , சுகாதாரம் இவற்றை அனுபவிக்க சுதந்திரம் இவை இருந்தாலே போதுமே . ஏன் இந்த நிலை . இந்திய வட கிழக்கு மாநிலங்களின் நிலை என்ன? ஏன் அவை நக்சல்பாரிகளை கொண்டு உள்ளது? உருவாவதன் காரணம் என்ன? ஏன் அந்த நிலையை சரி செய்யக்கூடாது?

ஏகாதிபத்திய அடிவருடிகளை இருந்து நாம் சாதிக்கபோவது என்ன? நம் நாட்டு மக்களின் வாழ்வாதாரம் இங்கு குறைபட்டு நிற்கிறது ஆனால் இங்கு சந்திரனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் வான் அறிவியல் ஆராய்ச்சி செய்கிறார்கள். மக்கள் பிரச்சனை தான் நாட்டின் பிரச்சனை. ஒருநாள் தனி நபர் வருமானம் என்ன? ஏன் அந்த இடைவெளி மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவேளை போ உள்ளது? வறுமையால் பஞ்சத்தில் மடிகின்ற மக்களின் வாழ்க்கை ஏன் இப்படி உள்ளது? இத்தனை சிந்திக்காமல் சந்திரனுக்கும் கோள்களுக்கும் நம் வரிப்பணம் சூறையாடப்படுகிறது.

லஞ்சம் இந்தியாவிலேயே கொடிய நோயாக வளர்ந்து வருகிறது ஊழல் தான் இதன் தாய். அந்நிய முதலீடுகளின் வழியே இவை வளர ஆரம்பிக்கின்றன.

ஏகாதிபத்திய
உணர்வுகளை களைந்து நாட்டுமக்களுக்கு எந்த அரசு நன்மை செய்ய நினைக்கிறதோ அந்த அரசை நாம் அமைக்க முன்வர வேண்டும். என்ன செய்வது துரதிஷ்டவசமாக அந்த பாக்கியம் நாம் இன்னும் அடையவில்லை .ஓரளவு தன்னிறைவு பெறவேண்டிய காலங்களிலே இந்த செய்தி வந்து இருப்பின், எதிகாலம் என்ன ஆகும் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது.

டாடா க்களும் அம்பானிகளும் தீர்மானிக்கிற பொருளாதாரத்தை நம் விவசாயிகள் என்று தீர்மானிக்க ஆரம்பிக்க போவது என்று?
சாவின் விளிம்பில் நிற்கின்ற இவர்களை அரசு கண்டு கொள்ளவதே இல்லை. ஆனால் தாஜ் ஓட்டல் இழப்பீடு தர யோசித்து கொண்டு இருக்கிறது. பெரிய அலுவலக முகப்புகளிலும் சாப்ட்வேர் பவனங்களிலும், மேகம் தொடும் ஹோட்டல் களுக்கும் இனி பாதுகாப்பு அதிகாரிக்கும். வழக்கம் போல மக்கள் வரிப்பணம் சூறையாடப்படும்.

விவசாயிகள் படுகொலை செய்யவைக்க படுகின்றனர் அரசால். வானம் பொய்க்கிறது . அரசு ஏய்க்கிறது. விழாக்களுக்கு குறைவில்லை. நேரத்திற்குஒரு கண்ணீரில் அரசின் பார்வையில் தெரிவதில்லை. தீவிரவாத நடவடிக்கைகளை வேரருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் திவிரவாதி உருவாவதர்க்கான சூழ்நிலையை உருவாக்காதீர்கள்.

பொருளாதார சிறப்பு மண்டலங்கள் அமைத்து நாட்டின் வளமையை பெருக்க போவதாய் சொல்லிக்கொண்டு திரிவானேன்? இந்த நிலைமையில் அவற்றின் கழிவுகள் ஆற்றில் கலந்து ஏழை மக்களின் வயிற்றில் பல நோய்களை இலவசமாக தருகின்றன. ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்களின் அடிபம்பு நீர் ஆதாரங்களை சூறையாடுகின்றன.

ஆக அடித்தட்டு மனிதன் வாழவே முடியாத இத்தகு சூழ்நிலையையும் தந்து விட்டு, மேலும் எப்போது பார்த்தாலும் பாகிஸ்தான் தீவிரவாதி என ஓலமிட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சி வேறு. கலவரங்களை தூண்டி விட்டு குளிர் காய்வோர் பலர் இந்த கூட்டத்தை சார்ந்தவர் தான்.

தீவிரவாதத்தை எதிர்க்கும் முன்பு இந்த நடவடிக்கைகளையும் செய்தால் ஏன் தீவிரவாதி உருவாகப்போகிறான்?