செவ்வாய், 25 நவம்பர், 2008

வெள்ளகாரனை விரட்டிவிட்டோம் - 2


"பணம் பத்தும் செய்யும், பணம் பாதளம் வரை பாயும் " உண்மையாக பணத்தை வைத்து எதையும் செய்து விட முடியுமா? முடியும் என்கிறது முதலாளித்துவம். ஆனால்
அதற்க்கு தெரியுமா?. துப்பாக்கிசூடு, மெலிந்த நாடு மேல் போர் மற்றும் பொருளாதார தடை இதுவன்றி உங்களால் ஒரு வருடமாவது இருக்கமுடியுமா? முடியும் என நீங்கள் சொன்னால், வேறு வகையான பொருளாதார, அரசியல் காரணங்கள் கண்டு பிடித்து விட்டீர்கள் என்று பொருள் அல்லது உங்களை எதிர்பவர்களை உங்கள் வழிக்கு கொண்டு வதற்கு சமயம் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.


"எவன் எப்படி போனால் என்ன? எனக்கு என் பங்கை கொடு"இது தானே உங்கள் கொள்கை. இருக்கட்டும் நீங்கள் மட்டும் ஏதும் செய்யலாம். இளைத்தவன் செய்தல் பயங்கரவாதம், உலகிற்கு அச்சுறுத்தல், இதனை வன்மையாக கண்டிப்பதோடு, முடிந்தால் அந்த நாடுகள் மீது போர் தொடுத்து பல ராணுவ அதிகாரிகளுக்கு பாலியல் வேட்டைக்காடாக மாற்றி, இயற்க்கை வளங்களை கொள்ளையடித்து ஓட்டண்டியாக்கி விட்டு, சொன்னதை கேட்கும் மனித ரோபோவை ஆட்சி தலைமையில் அமர்த்தி, ஜனநாயகம் மலர்ந்து விட்டதாய் பொய் மூட்டையை தன் ஊடகங்களுக்கு தருவது .

ஓசோன் படலத்தை ஓட்டையாக்கும் காரியங்கள் உங்களால் செய்யப்பட்டு, இப்போது "உலகத்திற்கு இது மிக ஆபத்தானது. இத்தனை தவிர்க்கும் செய்கை ஆரம்பிக்கப்பட வேண்டும்" இப்படி பல தண்டோரக்களை போடுவதே பகுதி நேரதொழிலாக உடைய உங்களுக்கு எப்போது புத்தி வரும்?

வங்கிகள் திவலானபோது கொழுப்பு மூட்டைகளை கரையேற்றி பெரும் அழிவிலிருந்து முதலாளித்துவத்தை காப்பாற்றியதாக பெருமிதம் கொள்ளும் அவ்வேளைகளில், சாதாரண குடிமகன் வீதிக்கு வந்து விட்டதை எண்ணாமல் இருக்கிறேரே....


தன் நாட்டு மக்களை காக்க முடியவில்லை என்ன சொல்வது நட்டு பொருளாதரத்தை காக்க, முடியவில்லை காண்கிறார், காதுசெவிடாகி விட்டது, இந்த பொய்களை கேட்டு கேட்டு.

தன்நாட்டு மக்களை காக்க தெரியாதவன் அடுத்த நாட்டு மக்களை ப்பற்ற வருகிறானாம், ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது
தமிழ் சொலவடை . இதனை மெய்பிப்பது போல எவர்கள் செயல்கள் உள்ளன. தடையற்ற வாணிபம் வேண்டுமாம், இதனால் உள்நாடு கைத்தொழில் பாதிப்படைந்தால் யாருக்கு நட்டம்? சிந்தித்தால் குமட்டல் வருகிறது உண்மை நிலை கண்டு.

விலை குறைவு தானம் அந்த பொருள்களுக்கு. அடக்க விலை நம் நாட்டுஅதற்க்கு அப்பால் அதிகம் தான். ஆனால் நாமே விலை நிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையை நமது நாட்டனுக்கே தருகிறோம். ஆனால் பன்னாட்டு கம்பனிகள் தற்போது விலையை குறித்தும், பின் வரும் நாட்களில் விலையை அதிகரித்து vidum. ஆமாம் போட்டிக்கு வந்த நமது நாட்டு பொருள்களெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்க இயலாததால் நசிந்து விட்டபின் ( யாரும் போட்டிக்கு வர இயலாது எனும் போது, அதனை அத்யாவசிய பொருளாக ஆக்கியபின்) மாறிவிடும்.

வெள்ளகாரனை விரட்டிவிட்டோம் - 1


நாம் சுதந்திரம் பெற்று விட்டோமாம். அட ஆமப்பா நாம வெள்ளகாரனை விரட்டிவிட்டோம். ஆனா அப்பவும் நம்ம அடிம புத்தி போகல. என்னடா நாமெலாம் பெரிய பெரிய பதவில இருக்கோமே , பின் ஏன் இந் வார்த்தை வரவேண்டும் என கேள்வி எழும் போது, அதற்கான விடை மிக சாதாரணமா சொல்லிவிடலாம். இப்போது நமது சுதந்திரமானது அடகு வைக்கபட்டிருப்பது, பன்னாட்டு கம்பனிகளிடம், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தனை சத்தமின்றி உலகை கம்பனிகளிடம் சொல்லிகொடுத்து கொண்டிருக்கிறது.


கரண்ட் இல்ல , கரண்ட் இல்ல நீ புலம்பாதே, எதாவது ஒரு கம்பனிகிட்ட ஒரு இன்வேர்டேர் வங்கிக்க, காசுகொடுத்துத்தான். என்ன ?, பன்னாட்டு கம்பனிகள் நிறைந்து இருக்கும் பகுதிகளுக்கு மட்டும் தாம் கரண்ட் தட்டுபாடு இல்லை. நம்ம நட்டு கம்பனி எப்படி போனால் நமக்கென்ன? அவன் வருசத்துக்கு போதும் எனும் அளவுக்கு " " தருவான் ஆனா நீ வரிதானே கொடுக்கிற?.அப்பறம் சங்கம் அப்படி இப்படி சொல்லி தோழர்கள் யாரும் வருசத்துக்கு பேசபடாது. வேலைக்கு உத்தரவாதம் தர முடியாது. மீறினால் வேலை நிரந்தரம் இல்லை.


இந்தியாவில் அடிமைமுறை இல்லை என நாம் பெருமை கொள்ள வைக்கப்பட்டு இருக்கிறோம். அடிமை என்று வரும்போது கோவில்களில் காணப்பட்ட தேவதாசி முறை கூட அடிமைமுறைதானே. அவர்கள் திருமணம் செய்ய கூடாது. ஆண்களின் போக பொருள்களாகவே நடத்தப்பட்டனர். சரி அது கூட தற்போது ஒழிக்க பட்டு விட்டது போல் ஆகி விட்டது எனக்கூறினாலும். பல செங்கல் சூளைகளில், பல தீப்பெட்டி, வெடிமருந்து தொழில் சாலைகளில் இன்னமும் தொடர்கிறது பாதுகாப்பற்ற முறைகளில் இன்னமும் தம் இன்னுழப்பை வழங்கி கொண்டு இருக்கிறார்கள்.

அடிப்படை கல்வி மறுக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையும் ஒரு வகையில் அடிமையே. இம்முறை ஒழிய கடுமையான சட்டங்கள் பிறப்பிக்க பட்டு , தீவிரமான முறைகளில் அமுல் படுத்த வேண்டும். அப்படி தவறு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் தவறு செய்தவர் ( அடிமையாக வைத்திருந்தவர்) தீவிரமான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்

திங்கள், 3 நவம்பர், 2008

கவிதை 1


மெல்லினமே உன்
இடையினத்தை
காட்டி
வல்லினம் என்னை தாக்கினாய்

*****************************************************

உன் கண்களால் என் இதயத்தை உடைத்தாய்
உன்
பேச்சால் என் லட்சியங்களை உடைத்தாய்
பின்
ஏன் உன் தந்தையிடம் கூறி என் எலும்புகளை உடைத்தாய்?

இந்த கவிதையை என்னுடைய அழகிய தேவதை வலையில் பார்க்கலாம்

ஹைக்கூ 1


மீசை இருந்தாலும்
ஆண்மகன் இல்லை
கரப்பன்
பூச்சி

******************************************************

பச்சையம்
இழந்த இலை
இன்னும் உதிராமல்
இளம் விதவை


*******************************************************

என்ன
முயன்றும் தோல்விதான்
இந்த
தேனீக்கு
பிளாஸ்டிக் ரோஜா

********************************************************


காய்த்த
மரம் கல்லடிபடும்
என்னை
ஏன் அடிக்கிறார்கள்?
யோசனையுடன்
ஓடும் நாய்

*********************************************************


இந்த இடுகையை என் அழகிய தேவதை வலையில் காணலாம்