திங்கள், 22 டிசம்பர், 2008

தீவிரவாத தோற்றுவாய்கள்


தீவிரவாத தடுப்பு என்பது முக்கிய விடயம் என பல நாடுகளிலும் இப்போது முக்கியத்துவம் பெற்று வருகிறது. தீவிரவாத ஒழிப்பை நடைமுறை படுத்துகையில் பல அப்பாவி பொது மக்களும் சொல்லான துயருற்று வருவதும் நாம் அறிந்ததே.
சில சுயநல ஆட்களால் பல அப்பாவி பொதுமக்கள் உயர் இழக்க நேருகையில் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என தெரியவில்லை ( யாராவது தெரிந்தால் எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி தயை கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன் )

இப்போது தீவிரவாத உருவாக்கத்திற்கான காரணங்களை ஓரளவு கண்டு கேட்டு அறிந்த வற்றை இந்த பதிவில் இடுகை இட சித்தம் கொண்டு உள்ளேன்.

* வறுமை
* வேலையின்மை
* பேராசை
* தேசப்பற்று இன்மை
* வாய்ப்பு மறுக்கப்படல்
*
வெறியூட்டப்படல்
*படிப்பு அறிவின்மை
*புறக்கணிக்கபடல்

பல இருந்தாலும் மேற்குறிப்பிட்ட காரணங்களே முக்கிய
இடத்தி பிடிக்கின்றன

வறுமை:

குடும்ப வறுமை, நம் பஞ்ச பட்டினிகளை களைய இயலாத அரசு மீது நம்பிக்கை தகருகின்றது . வறுமை பல கொடுமைகளுக்கு தாய் போல உள்ளது. தேவையே கண்டுபிடிப்புகளின் தாய் என்பது போல . வறுமை பல கொடுமை செய்தாவது வயிற்று பாட்டை தீர்க்க தூண்டுகிறது. பின் வசதியாய் வந்தபின்னும் அதனை விட முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. தீவிரவாதிகள் மக்களின் வறுமையை பயன்படுத்தி குற்றம் புரிய தூண்டுகிறார்கள். அரசு மக்களை பட்டினியில் வைத்து இருப்பது ஒன்றே இந்த நிலை ஏற்பட காரணம். அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற இயலாத குடும்பத்தலைவன் இந்த நிலையில் என்ன வேண்டு மானாலும் செய்ய தயாராகி விடுகிறான் .

வேலையின்மை:

இந்த நிலை தான் வறுமைக்கே காரணம் . அவன் வேலையை சரியாக செய்து கொண்டு இருந்தாலே யாரையும் அண்ட வேண்டிய சூழ்நிலை குறைக்க படுகிறது . வேலை குடும்பம் குழந்தைகள் என்று வாழ்க்கை தானாக செல்ல ஆரம்பிக்கும் போது எந்த பிரச்சினையும் வருவதில்லை.

படிக்க முடிவதே இந்தக்காலகட்டத்தில் பெற்றோர்களுக்கு மிகப்பெரும் சுமையாக இருக்கும் போது படித்து முடித்த பின் வேலைக்கு அலைவது மிக அதிக மாக இருக்கின்றது படிக்க முடியவில்லை படித்தால் படித்ததற்கு வேலை இல்லை. சம்பந்தம் இல்லாத வேலைகளில் மனம் லயிக்க இயலாது. வேலை லஞ்சம் என்பது பல துறைகளில் நுழைந்து ஏழைகளுக்கு எட்டகனியாய் மாற்றமுயற்சிக்கின்றன. சிபாரிசு மற்றொரு பெருச்சாளி. திறமையுள்ளோர் பலர் வரிசயில் நிற்க இந்த இரண்டு ஜந்துக்களும் பல மக்களின் வாழ்கையில் கிலியை உண்டாக்கி உள்ளன.
திறமை உள்ளசிலருக்கு உடனே வேலை கிடைத்து விடுவது மகிழ்ச்சி. பலர் இன்னும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருப்பதால். விரக்தியடைந்து மூளை சலவைக்கு உட்படுத்தப்பட்டு தீவிரவாதிகளை மாற்றமடைகின்றனர்.

பேராசை:

சில காலத்திற்குள் பணம் சம்பாதிக்க வேண்டும். பட்டதெல்லாம் போதும் . பணம் வெந்தால் எதையும் செய்யலாம். உடனே பணம் சம்பாதிக்க வழிவகைகளை யோசிக்க ஆரம்பித்தால் தவறான பாதைகள் பயணத்திற்காக தயார்செய்ய ஆரம்பிக்கின்றனர். இந்த நிலைகளை தீவிரவாத இயக்கங்களுக்கு பல உதவிகள் செய்ய காரமாகி விடுகிறது. தீவிரவாதிகளின் வேலைகள் இவர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைக்கு தள்ளப்பட காரணமாகிவிடும்.

தேசப்பற்று இன்மை :

இன்மை இந்த தேசம் நம் அன்னை போன்றது இந்த தேசத்தை போற்றிக்காப்பது நம் கடமை என்பத்தி உணராமல் இருப்பதே தீவிரவாத செயல்களுக்கு அஸ்திவாரம். இந்த தேசத்தை காப்பது என்பது வறுமை, வேலையின்மை ஆகியவற்றை நீக்கினால் மக்கள் பற்றுகையை உணர ஆரம்பிப்பார்.

வாய்ப்பு மறுக்கப்படல்:

ஒருவனுக்கு நியாயகமாக கிடைக்க வேண்டிய பலன் கிடைக்க தவறும் பட்சத்தில் மனம் நொந்து கடுமையான வேதனைகள் அவனுக்குள் நுழைகின்றன . அப்போது அவன் உண்மையாக உழைத்த நேரங்கள் வீணடிக்க பட்டதை உணர ஆரம்பிக்கிறான். அப்போது இந்த மன நிலை தவறாக நினைக்க ஆரம்பிக்கின்றது .தீவிரவாதியாக மாறுவதுக்கு இது முன் நிலை,


வெறியூட்டப்படல்:

உலகத்தில் நீதான் எல்லாம் . நம்மைக்கக்க உனக்கு கடமை இருக்கிறது . உன்னால் முடியும் . இந்த செய்கைகளுக்கு உனக்கு எப்போதும் புகழ் பரவும். தியாகியாக்கி விடுவாய். தயக்க மடைய வேண்டாம். உனக்கு எப்போதும் நாங்கள் துணை இருப்போம் பயப்பட தேவை இல்லை. நீ இந்த காரியத்தை செய்து தான் ஆகவேண்டும். வேறவழி இல்லை என வெறி உள்ளுக்குள் ஏற்றப்பட வலுவாகிறது. அவர்கள் நம் எதிரிகள் அவர்கள் நம்மை துன்புறுத்துகிறார்கள் . அவர்களை பழிவாங்க வேண்டும் என பல காலங்களாக சொல்லி சொல்லியே வெறி ஊட்டப்படுவது ஒரு காரணமாகி விடுகிறது


படிப்பு அறிவின்மை:

கல்வி பெற்று வேலை இல்லாமல் இருப்பது மட்டும் இந்த நிலைக்கு காரணம் இல்லை. படிப்பு அறிவில்லாத காரணமும் முக்கியமானது தான் . நல்லது கெட்டது அறிவதற்கும் ., என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இழப்பு ஏற்படுத்த இவர்கள் பயன் படுத்த படுகிறார்கள். நாடு எந்த நிலையில் உள்ளது அதற்க்கு நம் பங்கு என்ன என்பது பற்றியே அறிவியல் அறிவில்லாத நிலையில் மிக சாதரணமாக பல கொடிய செயல்களை செய்யபயிற்று விக்க படுகிறார்கள்.

புறக்கணிக்கபடல்:

மக்களில் பலர் கீழ் நிலை பெற்று காணப்படுகின்றனர் நியாயமான வாய்ப்புகள் கூட இவர்களுக்கு வழங்கபடுவதில்லை. தொடர்ந்து அரசால் கண்டு கொள்ள படாமல் இருப்பதால் நொந்து இந்த தவறான பாதைக்கு அடித்தளம் இடப்படுகின்றனர். உதாரணமாக வஞ்சிக்க பட்ட விவசாயி இந்த பாதையை நாடுவதும் நக்சல் பாதையை தேர்ந்து எடுப்பதற்கு காரணமாகி விடுகிறது.
நிலத்தை வலுக்கட்டாயமாக பறித்தல் . சமநிலை பாராது ஒரு சார்பாக இருத்தல் போன்றவையும் . மேலும் ஒடுக்க படல் போன்றவைகள் தீவிரவாத தோற்றுவாய்கள்.

இந்த நிலைகள் யாவும் அடிப்படையிலே கிள்ளி எறிவதால் மட்டுமே தீவிரவாதம் தழைக்காமல் காக்க முடியும் . சாதரண ஆள் கூட அடிபடைவசதிகளுடன் இருந்தால் தான் தீவிரவாத ஒழிப்புக்கு முழுமைப்படும்

கருத்துகள் இல்லை: